கரூர் தாந்தோன்றி மலையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விஜய்யின் பிரச்சார வாகனம் விசாரணைக்காக கொண்டு வரப்பட்டது. கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்தனர். மேலும், பிரச்சார வாகன ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.