கரூரில் கார் மோதி இருசக்க வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு

0பார்த்தது
கரூரில் கார் மோதி இருசக்க வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா தாளப்பட்டி அடுத்த கரைபாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (48) என்பவர், மொச்ச கொட்டாம்பாளையம் சாலையில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த சுதாகரின் கார் மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பத்மா அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி