கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு பிப்ரவரி 10 அன்று மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் நளினி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கார்வேந்தன், மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரியா ஈஸ்வரன் ஆகியோர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.