இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரடிப்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர்களுக்கு கணக்கெடுக்கும் படிவத்தினை வழங்கி வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் ஆய்வு செய்தார். இந்த சிறப்பு தீவிர திருத்தம் 2026-ஐ முன்னிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.