கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் விநாயகர், பகவதி அம்மன், முத்தாலம்மன், கருப்பண்ணசாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று திங்கட்கிழமை (10.11.2025) காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை நடைபெற்றது. கரூர் முரளி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு, கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கோமாதா பூஜை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.