கரூர் ஜெகதாபி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ராமசாமி, நேற்று லிங்கத்தூர் பாலம் அருகே ஸ்கூட்டியில் சென்றபோது, தருணிகா ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் ராமசாமி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராமசாமியின் மகன் நாகராஜ் அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.