கரூர் வெள்ளியணை அருகே, அம்சவல்லியின் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற முத்தம்மாள் (60) தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து முத்தம்மாளின் மகன் முருகன் அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.