கரூர் மாவட்டம் மன்மங்கலம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 85 வயதான அருக்காணி அம்மாள், கரூர் மில்கேட் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தபோது, ஸ்கூட்டி மோதி தலையில் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவரது மகன் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.