கரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 74 அரசு டாஸ்மாக் மது கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாத சம்பளத்தை ரூபாய் 12000 மேல் உயர்த்தி வழங்க வேண்டும், காலி பாட்டில்களுக்கு ரூபாய் 10 திரும்பப் பெரும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.