கரூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கர், தரகம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டார். அப்போது, அரசு அனுமதி இன்றி லாரியில் கிராவல் மண் கடத்தி வந்த ஓட்டுநர் தப்பி ஓடினார். 4 யூனிட் கிராவல் மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.