கரூர் சர்ச் கார்னர் புது தெருவைச் சேர்ந்த சாரீஸ் ஜெபக்குமார் (46) என்பவர், காக்காவாடி நாயக்கனூர் சாலையில் ஸ்கூட்டியில் சென்றபோது அதிவேகமாக ஓட்டி பிரேக் பிடித்ததில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவருக்கு, அவரது மனைவி ஜான்சி ராணி அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.