புலியூரில் புதிய வணிகவரித்துறை அலுவலகம் திறப்பு

378பார்த்தது
கரூர் மாவட்டம் புலியூரில் புதிய மாநில வரி அலுவலர் அலுவலகம் இன்று (பிப்ரவரி 13) தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமிசுந்தரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஒ செயலாளர் ரகுநாதன், புலியூர் பேரூராட்சி துணைத் தலைவர் அம்மையப்பன், துணை ஆணையர் கீதா, மாநில வரி அலுவலர் சாரங்கம் பாரதி, உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், உதவிப் பொறியாளர் பாரதி உள்ளிட்ட வணிகவரித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி