கரூரில் பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0பார்த்தது
கரூரில் பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் புகலூர் வேலாயுதம்பாளையம் அருகே ஸ்கூட்டர்-பைக் மோதியதில் 53 வயதான பாஸ்கர் என்பவர் உயிரிழந்தார். நேற்று புன்னம் சத்திரம் சாலையில் அத்திக்கபள்ளம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. எதிரே வந்த கௌதம் ஓட்டி வந்த பைக் பாஸ்கரின் ஸ்கூட்டர் மீது மோதியதில் இருவரும் காயமடைந்தனர். பாஸ்கர் பலத்த காயமடைந்த நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர் ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி