கரூர் காந்தி சாலை மேற்கு பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி மாரிமுத்து, கடந்த 19ஆம் தேதி வெள்ளியணை அய்யம்பாளையம் காலனி சாலையில் ஸ்கூட்டரில் சென்றபோது திடீரென பிரேக் பிடித்ததில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.