கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலையில் இன்று நடைபெற்றது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞரின் கனவு இல்லம், வீடுகள் பராமரிப்பு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், சிறு குளம் அமைத்தல், கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.