கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த சவுக்கு சங்கர், தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற அச்சம் இருந்தால் அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செயல்பட மாட்டார்கள் என்று கூறினார். ரெகுலர் டிஜிபி அதிகாரியை நியமிக்காததால் கையாலாகாத பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என்றும், ஐபிஎஸ் அதிகாரி அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி திருச்சி எஸ்பி செல்வநாகரத்தினம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். அவருக்கு அடுத்த மாதம் வாய்தா வழங்கப்பட்டுள்ளது.