கரூர் மண்மங்கலம் வாங்கல் பகுதியைச் சேர்ந்த 47 வயதான முபாரக், கரூர் பி எல் ஏ ரெசிடென்சி அருகே இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 12ஆம் தேதி கறி வாங்க வந்த சத்யா நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியே தனஜெயன் ஓட்டி வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முபாரக் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.