கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 29 வயது பாரத் என்பவர், கடந்த ஒன்றாம் தேதி கத்தாலபட்டி பிரிவு அருகே சாலையில் பைக்கில் சென்றபோது, மோகன்ராஜ் ஓட்டி வந்த ஓம்னி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை நாகராஜன் அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.