கரூர் அருகே சுக்காம்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (19) என்பவர், சூரியராஜ் ஓட்டி வந்த பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றபோது, கருப்பையா ஓட்டி வந்த ஸ்கூட்டி நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலம்பரசனின் தந்தை ராஜலிங்கம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.