கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் 64. இவர் வீட்டின் முன்பு நடந்து செல்லும் பாதையில் அருகில் குடியிருக்கும் நபர்கள் கல்லை கொட்டி வைத்துள்ளனர்.
இதுகுறித்து கேட்ட ஆண்டியப்பனை தங்கம்மாள், தமிழரசி, பாலகுமார், பொன்னாம்பாள், நந்தினி ஆகிய 5 பேரும் ஆண்டியப்பனை திட்டி, வேட்டியை பிடித்து கிழித்து கீழே தள்ளி குச்சி மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர். காயம்பட்ட ஆண்டியப்பன் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மணப்பாறை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து ஆண்டியப்பன் அளித்த புகாரின் பேரில் 5 பேர் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்