கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பழைய ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பிரகாஷ் 20. இவர் நேற்று பழைய ஜெயங்கொண்டம் நான்குரோடு அருகே சட்டவிரோதமாக கஞ்சாவை மறைத்து வைத்து பயன்படுத்திக் கொண்டிருந்தார். அதனையடுத்து லாலாபேட்டை போலீசார் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 20 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.