கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா வரகூரிலிருந்து வயலூர் செல்லும் சாலை கடந்த ஐந்து ஆண்டுகளாக குண்டும் குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.