கரூர் மாவட்டம் கடவூர் சுக்காம்பட்டியைச் சேர்ந்த காளியம்மாள் (25) என்பவர் நேற்று முன்தினம் சுக்காம்பட்டி சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த தங்கவேல் ஓட்டி வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். அவர் வையம்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். பாலவிடுதி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.