கடவூரில் மாணவி மீது கொதி எண்ணெய் வீசிய வாலிபர் கைது

0பார்த்தது
கடவூரில் மாணவி மீது கொதி எண்ணெய் வீசிய வாலிபர் கைது
கரூர் மாவட்டம் குளக்காரன்பட்டியைச் சேர்ந்த பிபார்ம் 4 ஆம் ஆண்டு மாணவி, அதே ஊரைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ரஞ்சித்துடன் காதலித்து வந்துள்ளார். ரஞ்சித்தின் நடவடிக்கைகள் சரியில்லை எனக் கூறி மாணவி காதலை முறித்துக் கொண்டதால், கோபமடைந்த ரஞ்சித், நேற்று இரவு 11.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த மாணவி மீது கொதித்த எண்ணெயை ஊற்றியுள்ளார். வலியால் துடித்த மாணவி கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி