
குளித்தலையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருசக்கர மோட்டார் வாகனங்கள் திருடு போயின. இது தொடர்பாக பைக்கின் உரிமையாளர்கள் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் விசாரணை நடத்தினர். விசாரணையில், தொடர் திருட்டில் ஈடுபட்ட வரகூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் தர்மலிங்கம் (23) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 5 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.































