பெரியபாலம் சோதனை சாவடி.. மணல் கடத்திய லாரி பறிமுதல்

66பார்த்தது
பெரியபாலம் சோதனை சாவடி.. மணல் கடத்திய லாரி பறிமுதல்
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் சோதனை சாவடியில் குளித்தலை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் 5 யூனிட் ஆற்று மணலை உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து திருச்சி மாவட்டம் கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வாசுதேவன் 25 என்பவர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் 5 யூனிட் மணலுடன் லாரி பறிமுதல் செய்தனர்

தொடர்புடைய செய்தி