கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஊர்புற நூலகத்தில் 58வது நூலக வார விழாவை முன்னிட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன், உதவி தலைமை ஆசிரியர் நஸ்ரின், ஊர்புற நூலகர் கண்ணதாசன், வாசகர் வட்ட தலைவர் பிச்சை மணி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.