கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மகா சிவன் ராத்திரி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு மயானம் சென்று எரிகாவு கொடுத்தல், அம்பாள் ரிஷப வாகனத்தில் சக்தி கரகம் உடன் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு 10 மணியளவில் அம்பாள் குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் தேங்காய், வாழைப்பழம் கொண்டு தரிசனம் செய்தனர்.