கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் டாஸ்மாக் அருகே உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் மதுவிற்ற காகம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து 55, சவாரி மேடு பகுதியைச் சேர்ந்த கோபி 37 ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 53 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.