குளித்தலையில் 699 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கரூர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி கலந்துகொண்டு 699 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வண்டி, 5 நபர்களுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.