கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் பரிசல் துறை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், காவிரி ஆற்று மணலை சிமெண்ட் சாக்கு பைகளில் கடத்தி வந்த கிருஷ்ணவேணி (44) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் நேற்று நடைபெற்றது.