உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சம்பி என்ற திருமணமான நபர், பல நாள்களாக பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (நவ., 18) அந்த பெண் வயலுக்கு சென்றபோது, சம்பி அவரை பின் தொடர்ந்து சென்று வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், அவரின் நாக்கை கடித்துத் துப்பினார். ரத்தம் சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.