இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் எடுத்த போது கோலி இச்சாதனையை படைத்தார். இதன் மூலம் சச்சின், சங்ககாராவுக்கு பின் 14,000 ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். தற்போது கோலி 22 பந்துகளுக்கு 23 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார்.