கிருஷ்ணகிரி மாவட்டம் மாதனகுப்பம் பகுதியைச் சேர்ந்த அலர்மேலு (68) என்பவர், அப்பகுதியில் நடந்து சென்றபோது, மழையால் துண்டிக்கப்பட்ட மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸார், உடலை மீட்டு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.