கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டியில் உள்ள தென்னீஸ்வரன் கோவில் உச்சியில் இன்று கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு 'ஓம் நமச்சிவாய' என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அண்ணதானம் வழங்கப்பட்டது.