கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வரர் நகர் சர்க்கிளுக்கு, மாநகராட்சி கூட்டத்தில் தந்தை பெரியார் சதுக்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தை நீக்கிவிட்டு, முனீஸ்வரர் நகர் சர்க்கிள் என்ற பெயரையே சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் நேற்று ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள பதாகைகளை ஏந்தி வந்தனர். உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்து எட்டு பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் அவர்கள் விடுவித்தனர்.