கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் யு. புரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் கஞ்சா இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அங்கு 700 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ருக்மணி, சிவா ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.