கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை ஓசூர் மாநகர மேயர் சத்யா நேற்று நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான விளையாட்டு உபகரணங்கள், நிழற்கூடைகள், பொதுக்கழிப்பிடங்கள் ஆகியவற்றை அமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.