ஓசூரில் பேருந்தில் போதை மாத்திரை கடத்திய மூன்று பேர் கைது.

ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று இரவு சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து கோவைக்குச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் சோதனை செய்தபோது, பயணிகள் 3 பேர் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாகப் பயன்படுத்த கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, கோவையைச் சேர்ந்த ஸ்ரீதரன் (30), பிரதீப் (29), நந்தகோபால் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 660 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.