கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே செட்டிமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ரவி (40) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.