நேற்று கார்த்திகை மாதம் பிறப்பை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை யாத்திரைக்கான விரதத்தைத் தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.