கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குடும்ப நலத்துறை சார்பில் உலக வாசக்டமி இருவார விழாவையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ. ஆ. ப. அவர்கள், இன்று 01.12.2025 அன்று வாசக்டமி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு. பாரதி, துணை ஆட்சியர் (பயிற்சி) சௌமியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.