கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைபெற்ற கலைஞர் கைவினைத் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி. கே.எம். சரயு நேற்று (ஜனவரி 10) கைவினைத் திட்டம் குறித்த திட்ட கையேடுகளை வெளியிட்டார். உடன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ச. பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி மேலாளர் எம். சரவணன், தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் இரா. ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.