கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி நகரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ்குமார் மற்றும் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தினர். மேலும், 5 வகை உணவு பரிமாறி தாய்மார்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.