கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கு வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, இணை இயக்குநர் (வேளாண்மை) காளியப்பன் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.