கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே, திமுக நிர்வாகியின் உறவினர் ஒருவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, வாகனங்களை வழிமறித்து, சாலையின் நடுவே கேக் வெட்டி, மேளதாளத்துடன் குத்தாட்டம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாடியவர் திமுக நிர்வாகியின் உறவினர் என்பதால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.