கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும், கலைச் சங்கமம் கிராமியக் கலைநிகழ்ச்சிகளை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் நேற்று துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் மங்கை அரிராஜன், நகரமன்ற துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி உள்ளிட்ட பலர் உள்ளனர். இதை பொதுமக்கள் கண்டு களித்தனர்.