கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் குட்டப்பட்டி அருகே நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த நபரை பிடித்து சோதனை செய்த போது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அவரது பெயர் செந்தில்குமார் (43) தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள ரச்சினம்பட்டியை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.