கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை அருகில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி CPM, CPI, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கி உரையாற்றினார். இதில் ஏராளமான கட்சியினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.