கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொல்லியல் ஆதாரங்கள் என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். இதில் வரலாற்று துறை தலைவர் கனகலட்சுமி வரவேற்றார். கவுரவ விரிவுரையாளர் சவுபாக்கியா முன்னிலை வகித்தார். இதில் ஓய்வு பெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.